• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, June 4, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home செய்திகள்

காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்துங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு!!

by admin
July 6, 2021
in செய்திகள், தமிழகம்
0
காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்துங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு!!
0
SHARES
54
VIEWS
Share on FacebookShare on Twitter

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பம்பரமாய் சுற்றி வருகிறார். கொரோனா இரண்டாம் அலையை சமர்த்தியமாக கையாண்டு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார் முதல்வர் அவர்கள். மேலும் மக்களின் வாழ்வாதரம் பாதிக்காத வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். அரசின் பணிகளையும் இரவு பகலாக கவனித்து வரும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்கள் நல திட்டங்களையும் அதிவேகமாக செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் செவ்வாய் கிழமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2010 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்விற்காக, மாற்றுத் குடும்ப தலைவரை மாற்ற திறனாளிகள் நலத் துறை என்ற தனித் துறை உருவாக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை எவ்விதத் தாமதமுமின்றி வழங்கிட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். நலத்திட்டங்கள், உபகரணங்கள் பெற விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனடியாக அவ்வுதவிகளை வழங்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட தேவையான நடவடிக்கைகளை அரசுத் துறைகள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடும் மற்றும் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான நலவாரியம், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

அரசுப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணச் சலுகை, வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை ஆகியவை எவ்வித தொய்வும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைத்தல் – அணுகுதல் வாய்ப்புகளை வழங்கிட உலக வங்கி நிதி உதவியின் கீழ் சுமார் ரூ.1702 கோடி மதிப்பிலான மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டத்தை தமிழ்நாட்டில் விரைவாக செயல்படுத்துவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவதையும், அரசுக் கட்டடங்களை மாற்றுத் திறனாளிகள் அணுகுவதற்கு எளிமையாக இருக்கும் விதமாக அமைக்க வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியன குறித்த விவரங்களை துறையின் செயலாளர் திரு. ஆர். லால்வேனா, இ.ஆ.ப., மற்றும் இயக்குநர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் திரு. ஆர். லால்வேனா, இ.ஆ.ப., மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: ChiefMinistercmstalinMkStalinTamilNadu Govt
admin

admin

Recommended

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பேருக்கு 278 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் இலவசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பேருக்கு 278 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் இலவசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

4 years ago
மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது! – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

தீபாவளிக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே புதிய பேருந்துகளை வாங்க தாமதம் ஏன்?அன்புமணி இராமதாஸ் கேள்வி !

8 months ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In