• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home சினிமா

சமந்தா-நாகசைதன்யா விவாகரத்து! ஆமீர்கான் தான் காரணம் கங்கனா ரணாவத் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

by admin
October 5, 2021
in சினிமா, செய்திகள்
0
நடிகை சமந்தா நாகசைதன்யா விவகாரத்தா! சமூகவலைதளைங்களில் பரவிய செய்தி உண்மையா?
0
SHARES
79
VIEWS
Share on FacebookShare on Twitter

சமந்தா அக்கினேனி தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்ஒரு மலையாள, தெலுங்கு தம்பதிக்கு பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார். 2007 இல் இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கினார்.

பின் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். பின் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.

தெலுங்கு பட உலகில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருபவர் நாகர்ஜுனாஇவருக்கு இந்தியா முழுவதும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவரின் மகன் நாகசைதன்யா இவரும் தெலுங்கு பட முன்னணி நடிகர்களில் ஒருவர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும், தெலுங்கில் சாகுந்தலம் படத்திலும் நடிக்கிறார். இதன் பிறகு சற்று பிரேக் எடுத்துக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

நடிகர் நாகசைதன்யா சமந்தாவிற்கும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூலை மாதத்தில் சமந்தா சமூக வலைதளத்தில் அவருடைய பெயரை மாற்றினார்.

திருமணத்துக்குப் பிறகு கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனியை தனது பெயருடன் இணைத்துக் கொண்டவர், ஜூலை மாதத்தில் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆங்கிலத்தில் ‘எஸ்’ என்று பெயரை மாற்றினார்.இந்நிலையில் நாகசைதன்யாவும், சமந்தாவும் தாங்கள் பிரிவதாக தத்தம் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தார்கள்.

இந்தநிலையில், சமந்தா, நாகசைதன்யா விவகாரத்து தொடர்பாக அமீர்கானையும் சேர்த்து மறைமுகமாக கங்கனா ராணாவத் கடுமையாக விமர்ச்சித்தார் இதுதொடர்பாக கங்கனா ராணாவத் அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில்,

‘எப்போது விவகாரத்து நடைபெற்றாலும் தவறு ஆண்கள் மேல்தான் உள்ளது. என்னுடைய குரல் பழமைவாதமாகவோ அல்லது முன்அனுமானம் செய்துகொண்டதாகவோ இருப்பது போல தெரியலாம். ஆனால், இப்படிதான் கடவுள் ஆணையும், பெண்ணையும் அவர்களது இயல்பையும் பண்புகளையும் வடிவமைத்துள்ளார். முதன்மையாக அறிவியல்பூர்வமாக ஆண் ஒரு வேட்டைக்காரன், அவள் வளர்த்தெடுப்பவர்.

பெண்களை ஆடை போல எளிதில் மாற்றி பின் அவர்களின் உற்ற நண்பர்களாக இருக்கிறோம் என்று பேசும் ஆண்களிடம் கனிவு காட்டுவதை நிறுத்துங்கள். ஊடகங்களிலிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் ஊக்கம் பெறும் இப்படிப்பட்டவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். அவர்களைப் புகழ்ந்து, பெண்ணின் குணத்தைப் பற்றித் தீர்மானிக்கிறார்கள். விவாகரத்து கலாச்சாரம் முன்னெப்போதையும் விட அதிகமாக வளர்ந்து வருகிறது.

சமீபத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்த தென்னக நடிகர் ஒருவர் 4 வருடங்களாகத் திருமண வாழ்க்கையிலும், 10 வருடங்களுக்கும் மேலாக அந்தப் பெண்ணுடன் காதலிலும் இருந்துள்ளார். இந்த நடிகர் சமீபத்தில், பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று அறியப்படும் ஒரு உச்ச நட்சத்திரத்தைச் சந்தித்திருக்கிறார். அந்த நட்சத்திரம் பல பெண்களின், குழந்தைகளின் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டுத் தற்போது பலருக்கு வழிகாட்டுபவராகவும், அறிவுரை சொல்பவராகவும் இருக்கிறார்.

எனவே எல்லாம் எளிதாக முடிந்துவிட்டது. இது கிசுகிசு அல்ல. நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்று நம் அனைவருக்குமே தெரியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: actorBREAKING NEWSCINECINEMAHOTNEWSNAGACHJAITHANYANEWSNEWS18TAMILSAMANTHSNIPER NEWSTAMILtamil naduTAMIL NEWSTamilNadu Govtvijay actopr
admin

admin

Recommended

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதி.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதி.

4 years ago

கள்ளக்குறிச்சி போலீசார் அதிரடி; 270 லிட்டர் கள்ளச்சாராயம், 8900 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு.

3 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In