தமிழக முதல்வர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றியுள்ளார். அதனடிப்படையில் தமிழகத்திற்கு நீட்தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசிய கள்ளக்குறிச்சி எம்பி பொன்.கௌதமசிகாமணி.
தமிழக முதல்வர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றியுள்ளார். மேலும் ஆளுநரை நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதனடிப்படையில் தமிழகத்திற்கு நீட்தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தால் தமிழகத்தில் இதுவரையில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வு தனியார் பயிற்சி வகுப்பிற்கு செல்ல சுமார் 5 இலட்சம் முதல் 10 இலட்சம் வரையில் செலவாகிறது இந்த தொகையை நடுத்தர, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களால் செலுத்த முடிவதில்லை. +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டும். எனவே ஒன்றிய அரசின் உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என என்று பொன்.கௌதமசிகாமணி எம்பி நாடாளுமன்றத்தில் பேசினார்..