கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வினை விரைவாக பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், குற்றங்கள் நிகழாமல் இருக்க பகல் மற்றும் இரவு ரோந்து காவலர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அறிவுரைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஜவஹர்லால், விஜயகார்த்திக்ராஜா, அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.