• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, June 4, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home செய்திகள்

திருக்கோவிலூரில் கொட்டும் மழையில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா.

by admin
September 15, 2023
in செய்திகள், மாவட்டம்
0
திருக்கோவிலூரில் கொட்டும் மழையில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா.
0
SHARES
316
VIEWS
Share on FacebookShare on Twitter

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அக்கட்சியின் 19வது ஆண்டு துவக்க விழா, தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவில், திருக்கோவிலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தேமுதிக விழுப்புரம் மாவட்ட செயலாளருமான எல்.வெங்கடேசன் கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவிகள் 600 பேருக்கு தலைக்கவசமும், 500-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கு வேட்டி சேலையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மேடையில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.வெங்கடேசன்; சினிமா காட்சியை ஒப்பிட்டு நகைச்சுவையுடன் கூறி திருக்கோவிலூரின் நிலையை வெளிப்படுத்தினார்.

சினிமா காட்சிகளில் மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கும் டிரஸ் என்னுடையது என்பது போல, இந்த திருக்கோவிலூரில் அமைந்துள்ள பேருந்து நிலையம் என்னால் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கொண்டு வந்தது எனவும், ஆனால் தற்போது பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள வளைவு தற்போதைய திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி அவர்களால் வைக்கப்பட்டது என கூறினார். அப்படி வைத்திருந்தாலும் திருக்கோவிலூர் பேரூராட்சி பேருந்து நிலைய நுழைவு வாயில் என உள்ளது. திருக்கோவிலூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை இந்த பேரூராட்சி என்ற பெயர் பலகையை கூட இந்த அரசும் அமைச்சரும் மாற்றாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அவர் பேசிக் கொண்டிருந்தபோதே மழை பெய்ய தொடங்கியதைடுத்து திருக்கோவிலூர் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பொதுமக்கள் காத்திருந்து நலத்திட்ட உதவிகளை கொட்டும் மழையிலும் வாங்கிச் சென்றனர்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSDMDKDMKFakeNewsKALLAKURICHIMLANEWSNEWS18TAMILSNIPER NEWSTAMILtamil naduTAMIL NEWSTamilNadu GovtTHIRUKOVILURtirukovilurvilluppuramVillupuram
admin

admin

Recommended

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

அரகண்டநல்லுார் அருகே மாட்டுவண்டியில் மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேர் கைது.

9 months ago
வெல்லிங்டனில் மாற்றங்களுடன் கூடிய சவாலான காலகட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம் என குடியரத் தலைவர் உரை.

வெல்லிங்டனில் மாற்றங்களுடன் கூடிய சவாலான காலகட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம் என குடியரத் தலைவர் உரை.

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In