திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட கீழையூர் பகுதியில் அமைந்துள்ள விரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு பஞ்சமூர்த்தி களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாலை 4 மணி அளவில் மூலவர் விரட்டானேஸ்வரருக்கு மகா அபிஷேகம் அலங்காரம் அதனைத் தொடர்ந்து. அதனை தொடர்ந்து நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
மாலை 6 மணி அளவில் பக்தர்களின் ஓம் நமச்சிவாயா கோஷம் முழங்க விரட்டானேஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு ஒருசேர சோடசோபவுபச்சார தீபாரதனை பிரதோஷ நாயகர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி, தீபாரதனை நடந்தது. பக்தர்களின் சிவபுராணம் முழங்க பிரதோஷ நாயகர் வலம் வந்தார். இந்நிகழ்வில், திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.