விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் வட்டம் , அரகண்டநல்லுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் நேற்று தணிக்கலாம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அய்யனார் கோவில் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 2 மாட்டு வண்டிகளை நிறுத்தியபோது மணல் கடத்தி வந்த நபர்கள் தப்பியோடினர்.அதில், பில்ராம்பட்டைச் சேர்ந்த இளவரசன், 29; அருணாபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆகிய இருவரை கைது செய்து, தப்பியோடிய பில்ராம்பட்டு கிருஷ்ணமூர்த்தி, ராஜி, ஏழுமலை, பரமசிவம், சங்கர் ஆகியோரை தேடி வருகின்றனர்.