விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்று இரவு மது போதையில் இருந்த மாற்றுத்திறனாளி அவ்வழியாக மளிகை கடை ஒன்றிற்கு சென்ற 14 வயது சிறுமியை வழிமறித்து மது போதையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி, சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் பெற்றோர் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாற்றுத்திறனாளி பவுல் புஷ்பராஜ்(45) என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மாற்றுத்திறனாளியை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.