கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சரவணம்பாக்கம் ஊராட்சியில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்களை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன் வழங்கினார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.