தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு மத்திய ரயில்வே எல்லைக்குள்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில், பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விழுப்புரம்-திருப்பதி இடையேயான ரயில் சேவை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து தினமும் காலை 5.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண் 16854), காட்பாடி-திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே ஜூலை 1 முதல் 31- வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
எதிா் வழித்தடத்தில் திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி- விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண் 16853), திருப்பதி-காட்பாடி இடையே ஜூலை 1 முதல் 31- வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.