விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் தேன்மொழி தேஜா ஶ்ரீ (19). தேன்மொழியின் பெற்றோர் இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தேன்மொழி அரகண்டநல்லூர் பகுதியில் கயிறு பின்னும் தொழிலில் ஈடுபட்டு வரும் தனது பெரியம்மா வீட்டில் சிறுவயது முதலே தங்கி படித்து வந்துள்ளார். திருக்கோவிலூர் பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில்
பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் தேன்மொழி அடிக்கடி செல்போனில் மூழ்கியதாக சொல்லப்படுகின்றது. மேலும் தற்சமயம் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களோ நீ சும்மா போன் தா பக்கர படிக்க மடங்கர, வர வர மார்க் அதிகமா எடுக்கல என்று திட்டி கட்டணம் செலுத்த போவதில்லை என கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் தனியாக இருந்த போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்தவர்கள் தூக்கில் தேன்மொழி தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார், தேன்மொழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனில் மூழ்கியதால் மதிப்பெண் குறைந்ததாக கூறி பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.