மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
அப்போது மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் 7 மீனவர்கள் கடலில் விழுந்தனர். அங்கே வேறு படகிலிருந்த சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
கச்சத்தீவு அருகே எல்லை தாண்டியதால் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.