Latest Post

கள்ளக்குறிச்சியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1920 மது புட்டிகள் பறிமுதல் ஒருவர் கைது !!!

கள்ளக்குறிச்சி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1920 மது புட்டிகள் பறிமுதல் ஒருவர் கைது !!! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் அரசு மதுக்கடைகளுக்கு...

ஐந்து மாதங்களில் இந்த அரசு 200 வாக்குறுதியை செய்து முடித்துள்ளது-அமைச்சர் எவா.வேலு திருக்கோவிலூரில் பேச்சு.

ஐந்து மாதங்களில் இந்த அரசு 200 வாக்குறுதியை செய்து முடித்துள்ளது-அமைச்சர் எவா.வேலு திருக்கோவிலூரில் பேச்சு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் இரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேடையில்...

திருக்கோவிலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் 8 லட்சம் பணம் பறிமுதல்.

திருக்கோவிலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் 8 லட்சம் பணம் பறிமுதல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அத்திப்பாக்கம் சோதனை சாவடியில் சிறப்பு தாசில்தார் கண்ணன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமை பெண் காவலர்கள் ஷகிலா...

திமுக ஆட்சியில் தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை,எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை  சட்டஒழுங்கு சரியில்லை-எடப்பாடி பழனிசாமி.

திமுக ஆட்சியில் தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை,எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை சட்டஒழுங்கு சரியில்லை-எடப்பாடி பழனிசாமி.

விழுப்புரத்திலுள்ள கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் விழுப்புரம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது....

திருக்கோவிலூர் அருகே வேட்பாளர் உறவினர் வீட்டில் 100 பேன் பறிமுதல்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்...

திருக்கோவிலூர் அருகே சோதனையில் ரூ.1,52,900 பணம், 529புடவைகள், 300 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.

திருக்கோவிலூர் அருகே சோதனையில் ரூ.1,52,900 பணம், 529புடவைகள், 300 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.

தமிழகம் முழுவதும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி தேர்தலை அறிவித்தது. வேட்புமனு பரிசீலனை முடிந்து ஆங்காங்கே தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள்...

திருக்கோவிலூர் அருகே பென்சில் அழிக்கும் ரப்பரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிற்பம் வரைந்த ஓவிய ஆசிரியர்.

திருக்கோவிலூர் அருகே பென்சில் அழிக்கும் ரப்பரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிற்பம் வரைந்த ஓவிய ஆசிரியர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே உள்ள சிவனார்தாங்கள் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் மணலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த செல்வம்....

விழுப்புரத்தில் வீடியோ வேன் பிரச்சாரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் துவக்கி வைத்தார்.

சென்னையில் உள்ள மத்திய அரசின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் 75ஆவது இந்திய சுதந்திரப் பெருவிழா & கோவிட்-19 தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த வீடியோ வேன்கள்...

சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை இந்திய அணிகள் வென்றன.

சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை இந்திய அணிகள் வென்றன.

போலந்தில் உள்ள ரோக்லாவில் 2021 ஆகஸ்ட் 9 முதல் 15 வரை நடைபெற்ற சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை இந்தியா வென்றது.  எட்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் என சர்வதேச இளைஞர் வில் வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பதக்கங்களை வென்ற ஐந்து இளம் வீரர்கள், 2021 செப்டம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்கா-உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள சீனியர் அணியின் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கேடட் மற்றும் ஜூனியர் ரீகர்வ் மகளிர் சர்வதேச சாம்பியன் பட்டத்தை தீபிகா குமாரிக்கு பிறகு இரண்டாவது இந்தியராக கோமாலிக்கா பாரி வென்றுள்ளார். இரண்டு புதிய சர்வதேச இளைஞர் சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பதக்கம் வென்றவர்களுக்கு புதுதில்லியில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் பேசிய இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவரும் பழங்குடியினர் நலன் அமைச்சருமான திரு அர்ஜுன் முண்டா, "உங்கள் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் அனைவரின் கடின உழைப்பும், மன உறுதியும், தியாகமும் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. நாளைய சாதனைக்கான தொடக்கமாக இன்றைய வெற்றி இருக்கட்டும்," என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.

தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான திரு ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி  (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகும். செப்டம்பர் 1-ஆம் தேதி (புதன்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 3 (வெள்ளிக்கிழமை) ஆகும். தேர்தலின்போது ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: 1.       தேர்தல் சம்பந்தமான பணிகளின் போது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். 2.       தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அரங்கம்/அறை/ வளாகத்தின் நுழைவாயிலில்: •        உடல்வெப்ப நிலை பரிசோதிக்கும் கருவிகள்‌ மூலம் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். •        அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினிகள் இடம்பெற வேண்டும். 3.       மாநில அரசு மற்றும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கொவிட்-19  வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். 4.       இந்தத் தேர்தல், கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரியை நியமிக்குமாறு  தமிழகத்தின் தலைமைச் செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Page 30 of 38 1 29 30 31 38

Follow Us

Business

No Content Available

Entertainment

No Content Available

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.