Tag: india

புதிய விதிமுறைகள் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு அறிவிப்பு !

புதிய விதிமுறைகள் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு அறிவிப்பு !

இந்திய ரிசர்வ் வங்கி( RBI) ஆன்லைனில் பணம் செலுத்துவதை பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் சில புதிய விதிகளை விதித்துள்ளது.  அதன் மூலம் அனைத்து வணிகர்களும், பணம் செலுத்தும் ...

கூடாது என்கிறது உச்ச நீதிமன்றம்.

கூடாது என்கிறது உச்ச நீதிமன்றம்.

இது சற்றே விநோதமான வழக்கு, 2013 யில் இருந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதில் கடந்த வியாழக்கிழமை மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல், மூத்த ...

இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 25 மாநிலங்கள் குறைத்துள்ளன.

இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 25 மாநிலங்கள் குறைத்துள்ளன.

பிரதமர் மோடி தீபாவளி முந்தைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ 5 மற்றும் ரூ 10 மத்திய அரசு க=குறைப்பதாக அறிவித்ததை தொடர்ந்து.மற்ற மாநிலங்களும் குறைத்துள்ளது. நுகர்வோருக்கு ...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணத்தை வெற்றிகரமாக இன்று முடித்தது. இதற்காக இந்த கப்பல் கொச்சியிலிருந்து கடந்த 4ம் தேதி புறப்பட்டது.  கடல் பரிசோதனைகள் ...

இ-ருபி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?

இ-ருபி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?

இ-ருபி என்பது அடிப்படையில் ஒரு டிஜிட்டல் வவுச்சர் ஆகும். அதனை பயனாளி அவரது தொலைபேசியில் குறுந்தகவல் வடிவிலோ அல்லது கியூஆர் கோட் வடிவிலோ பெறுவார். இது முன்கூட்டியே ...

ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்கான சட்டங்களை திறம்பட அமல்படுத்த குடியரசு துணைத் தலைவர் அழைப்பு.

ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்கான சட்டங்களை திறம்பட அமல்படுத்த குடியரசு துணைத் தலைவர் அழைப்பு.

சிறார் நீதி (குழந்தைகளுக்கான  பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வரவேற்றார் மற்றும் இதை அடிமட்ட அளவில் தீவிரமாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.  மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்  மேம்பாட்டுத்துறை அமைச்சர்  திருமதி ஸ்மிருதி இரானி, குடியரசு  துணைத் தலைவரை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தபோது, திரு. வெங்கையா நாயுடு இந்த கருத்துக்களை தெரிவித்தார்.  பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற குழந்தைகள்  தொடர்பான பிரச்சினைகள் குறித்து பல கோரிக்கை மனுக்களை பெற்றதாக குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார். மாநிலங்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சிறார் நீதி சட்ட திருத்தம், 2021-ன் சிறப்பம்சங்கள் குறித்து, குடியரசு துணைத் தலைவருக்கு, மத்திய அமைச்சர் விளக்கினார்.  தத்தெடுக்கும் முறைகளை விரைவுபடுத்தவும் மற்றும் ஆதரவற்ற  குழந்தைகளுக்கு சிறப்பான பாதுகாப்பை உறுதி செய்யவும் சமீபத்திய சட்ட திருத்தம், கூடுதல் மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிப்பதாக குடியரசு துணைத் தலைவரிடம் திருமதி. ஸ்மிருதி இரானி தெரிவித்தார். ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக, மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு அமல்படுத்தும் உதவி மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் பலவற்றை அவர் குறிப்பிட்டார்.  ஆதரவற்ற குழந்தைகள் மீது தனக்கு எப்போதும் பரிவு இருப்பதாக கூறிய திரு வெங்கையா நாயுடு, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது சமூகம் மற்றும் அரசின் ஒட்டுமொத்த பொறுப்பு என வலியுறுத்தினார். சமீபத்தில், ஆதரவற்ற குழந்தைகள், குடியரசு துணைத் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார்.

இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து இன்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். சீனாவை சேர்ந்த ஹீ பிங் ...

தடுப்பூசிகளின் எண்ணிக்கை 39 கோடியைக் கடந்தது

தடுப்பூசிகளின் எண்ணிக்கை 39 கோடியைக் கடந்தது

இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 39 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை ஏழு மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், 49,41,567 முகாம்களின் மூலம் மொத்தம் 39,13,40,491தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,97,058தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. கொவிட்-19 பெருந்தொற்று ஆரம்பித்தது முதல், 3,01,43,850பேர் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,130தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.  தேசிய குணமடையும் விகிதம் 97.28% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 41,806 அன்றாட புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து 18-வது நாளாக தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 4,32,041ஆக உள்ளது. இது மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கையில் 1.39 விழுக்காடு மட்டுமே. கடந்த 24 மணி நேரத்தில் 19,43,488 பரிசோதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 43.80 கோடியைக் கடந்து, 43,80,11,958ஆகப் பதிவாகியுள்ளது. வாராந்திர தொற்று உறுதி விகிதம் தற்போது 2.21% ஆகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.15% ஆகவும் தற்போது உள்ளது. தொடர்ந்து 24-வது நாளாக தொற்று உறுதி விகிதம் 3 விழுக்காட்டுக்கு குறைவாகவும், 38-வது நாளாக 5 விழுக்காட்டுக்கு குறைவாகவும் உள்ளது.

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் நேரடி முகவர்களுக்கான நேர்காணல்.

அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் விற்பனைக்கான நேரடி முகவர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. 30.7.2021 அன்று காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா சாலை, தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ள நேர்காணலில்  கீழ்க்காணும் தகுதி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். தேவையான தகுதிகள்: a.       கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் b.       வயது: 18 முதல் 50 வரை c.       பிரிவுகள்:  வேலையில்லாத/ சுயதொழிலில் ஈடுபடும் படித்த இளைஞர்கள்/ முன்னாள் ஆயுள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் முகவர்கள்/ முன்னாள் ராணுவ வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்/ மகிளா மண்டல் பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அல்லது மேற்கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள். d.       விருப்பத் தகுதி: காப்பீடு திட்டங்களின் விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினி சார்ந்த பயிற்சி பெற்றவர்கள்/ உள்ளூர் பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள், சென்னை நகரத்தில் வசிப்பவர்கள். e.       இதர காப்பீட்டு நிறுவனங்களில் முகவர்களாகப் பணிபுரிபவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியில்லை. விண்ணப்பதாரர்கள், தங்களைப் பற்றிய முழு விவரம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வயது/ கல்வித்தகுதி/ தேவையான சான்றிதழுடன் நேர்காணலிற்கு வரவேண்டும். சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் துறைத் தலைவர் திரு எம். முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: தினசரி தொற்று எண்ணிக்கை 42,766 ஆக பதிவு

கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: தினசரி தொற்று எண்ணிக்கை 42,766 ஆக பதிவு

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 37 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 48,04,423 முகாம்களில் 37,21,96,268 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,55,802 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 13-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,55,033 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.48 சதவீதமாகும். இதுவரை மொத்தம் 2,99,33,538 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 45,254 பேர் குணமடைந்தனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,55,225 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 42,90,41,970 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.34 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.19 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 19 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு குறைவாகவும், 33 நாட்களாக 5 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.

Page 1 of 2 1 2

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.